sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆன்மிக பயணம் சென்ற சத்குருவுக்கு கம்போடியா நாட்டு பிரதமர் வரவேற்பு

/

ஆன்மிக பயணம் சென்ற சத்குருவுக்கு கம்போடியா நாட்டு பிரதமர் வரவேற்பு

ஆன்மிக பயணம் சென்ற சத்குருவுக்கு கம்போடியா நாட்டு பிரதமர் வரவேற்பு

ஆன்மிக பயணம் சென்ற சத்குருவுக்கு கம்போடியா நாட்டு பிரதமர் வரவேற்பு


ADDED : மே 01, 2024 08:41 PM

Google News

ADDED : மே 01, 2024 08:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்:கம்போடியா நாட்டிற்கு ஆன்மிக பயணம் சென்றுள்ள, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுக்கு அந்நாட்டு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, தென்கிழக்கு ஆசியாவின் ஆன்மிக அம்சங்கள் குறித்து ஆராய, 10 நாள் ஆன்மிக பயணம் சென்றுள்ளார்.

பயணத்தின் ஒரு பகுதியாக, கம்போடியா நாட்டுக்கு சென்ற சத்குருவை, அந்நாட்டின் பிரதமர் ஹன் மானெட் வரவேற்று எழுதிய கடிதத்தை, அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் சோக் சோகன் வழங்கினார்.

கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கம்போடியா நாட்டு மக்கள் மற்றும் என் சார்பில், சத்குருவை சியம் ரீப் நகரத்திற்கு அன்போடு வரவேற்பதோடு, இங்கு நீங்கள் தங்கும் நாட்கள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். உங்களின் தியான நிகழ்ச்சிக்கு, அங்கோர் தொல்லியல் பூங்காவை நீங்கள் தேர்ந்தெடுத்ததால், நாங்கள் கவுரவிக்கப்பட்டுள்ளோம். தாங்கள் இங்கு இருக்கும் காலம் அமைதியால் குறிக்கப்படட்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சமூக வலைதளத்தில் சத்குரு வெளியிட்டுள்ள பதிவு:

கம்போடியா பிரதமர் ஹன் மானெட்டின் அழைப்பு கடிதத்திற்கும், வரவேற்பிற்கும் நன்றி. இந்த தேசத்தின் நினைவுச் சின்னங்களும், கலாசாரமும், மனித புத்தி கூர்மைக்கும், உறுதிக்குமான பிரமிக்க வைக்கும் அஞ்சலியாக உள்ளது' என பதிவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us