ADDED : மார் 28, 2024 10:51 PM
சென்னை:கோடை வெயில், படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில், 40 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
தர்மபுரி, மதுரை, சேலம், நாமக்கல், 39; திருச்சி, திருத்தணி, வேலுார், 38 டிகிரி செல்ஷியஸ் என, 9 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டையொட்டி, வெப்பநிலை பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம், 34; மீனம்பாக்கம், பாளையங்கோட்டை, 36; கோவை, 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநில அளவில் ராமநாதபுரத்தில் மட்டும், 1 செ.மீ., மழை பெய்துள்ளது. இன்று முதல், 1ம் தேதி வரை, நான்கு நாட்கள் தொடர்ச்சியாக, வறண்ட வானிலை நிலவும். அதிகபட்ச வெப்பநிலை முந்தைய நாட்களை விட, 2 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்சம், 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

