sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இது முதல் முறை சோலார் உற்பத்தி 6000 மெகா வாட்

/

இது முதல் முறை சோலார் உற்பத்தி 6000 மெகா வாட்

இது முதல் முறை சோலார் உற்பத்தி 6000 மெகா வாட்

இது முதல் முறை சோலார் உற்பத்தி 6000 மெகா வாட்


ADDED : செப் 14, 2024 02:32 AM

Google News

ADDED : செப் 14, 2024 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் முதல் முறையாக சூரியசக்தி மின் உற்பத்தி நேற்று முன்தினம் 6090 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.

சூரியசக்தி மின் உற்பத்திக்கு சூரியனின் வெப்பத்தை விட வெளிச்சமே அவசியம். தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேலாக சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும் சூழல் நிலவுகிறது.

குறிப்பாக விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 5:30 முதல் இரவு 7:00 மணி வரையும்; மற்ற மாவட்டங்களில் காலை, 6:30 முதல் மாலை 6:00 மணி வரையும் சூரிய வெளிச்சம் கிடைக்கிறது.

இதனால் பெரிய நிறுவனங்கள் தென் மாவட்டங்களில் அதிக திறனில், நிலத்தில் சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க ஆர்வம் காட்டுகின்றன.

மாநில மின் பகிர்ந்தளிப்பு மைய தகவலின்படி தற்போது தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த சூரியசக்தி மின் நிலையங்களின் உற்பத்தி திறன் 8784 மெகாவாட்.

மழை பெய்யும் நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் சூரியசக்தி மின் நிலையங்களில் தினமும் சராசரியாக 4000 - 4500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.

செப்.7ம் தேதி அதிக அளவாக 5985 மெகா வாட் கிடைத்தது.

நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத அளவாக 6090 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.






      Dinamalar
      Follow us