ADDED : ஆக 04, 2024 01:02 AM
28.7.2024 முதல் 3.8.2024 வரை தமிழகத்தில் நடந்த கொலைகள்
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே, பாரதப்பள்ளி குன்னத்துவிளையைச் சேர்ந்த இளைஞர் காங்., நிர்வாகி ஜாக்சன், 38, மனைவி கண் முன் வெட்டிக் கொல்லப்பட்டார்
கரூர் தெற்கு காந்தி கிராமம் கம்பன் தெருவை சேர்ந்தவர் ஜீவா, 20. இவர், எட்டு பேர் கொண்ட கும்பலால், கரூர் சிட்கோ பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு, உடலை ஏழு துண்டுகளாக வெட்டி மண்ணில் புதைக்கப்பட்டார்
சிவகங்கை அருகே, எம்.வேலாங்குளத்தைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகி செல்வகுமார், 52. இவர், சாத்தரசன் கோட்டையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய போது, மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் பத்மநாபன், காரில் வந்த மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்
சென்னை எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த விஜயா, 78, நகை, பணத்துக்காக கழுத்தில் மிதித்து கொல்லப்பட்டார்
கோவை ரத்தினபுரி விஸ்வநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் உதயகுமார், 48, கொடூரமாக வெட்டியும், மர்ம உறுப்பை அறுத்தும் கொல்லப்பட்டார். ஜான்பாண்டியன் ஆதரவாளராக இருந்த இவர், தற்போது கமல் கட்சியில் மாவட்ட பொறுப்பு வகித்து வந்தார்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த மதுரைவீரன், 58, குடும்ப தகராறு காரணமாக, மருமகன் தியாகுவால் கொல்லப்பட்டார்
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி, 41, தன் வீட்டு வாசலில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.