sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாலியல் வழக்குகளில் நேற்றைய தினம் கைதானவர்கள்!

/

பாலியல் வழக்குகளில் நேற்றைய தினம் கைதானவர்கள்!

பாலியல் வழக்குகளில் நேற்றைய தினம் கைதானவர்கள்!

பாலியல் வழக்குகளில் நேற்றைய தினம் கைதானவர்கள்!

19


ADDED : பிப் 26, 2025 07:11 AM

Google News

ADDED : பிப் 26, 2025 07:11 AM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போக்சோ வழக்குகளில் சிலர் கைது செய்யப்பட்டனர். அதன் விபரம் பின்வருமாறு:

நேற்றைய போக்சோ


இலங்கை அகதி சிக்கினார்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் இந்திரன், 24. இவர், சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரில், இந்திரன் மீது கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்குப் பதிந்து கைது செய்தனர்.



ஆபாசமாக பேசியவருக்கு 'கம்பி'

பெரம்பலூர் மாவட்டம், ஓதியம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 55, இவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியிடம், ஆபாச வார்த்தைகளை பேசி, பணம் தருவதாக கூறியதாக தெரிகிறது. சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் போலீசில் புகார் செய்தனர். மங்கலமேடு அனைத்து மகளிர் போலீசார் முத்துசாமி மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்தனர்.



தற்காலிக ஆசிரியர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் பிரபு, 32: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த காவலூர் மலைரெட்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், தற்காலிக ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வத்தார். கடந்த 21ம் தேதி அவர், ஏழாம் வகுப்பு மாணவியர், ஆறு பேரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். வாணியம்பாடி மகளிர் போலீசார் பிரபுவை போக்சோவில் கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us