sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு தி.மு.க.,வில் கடும் போட்டி

/

ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு தி.மு.க.,வில் கடும் போட்டி

ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு தி.மு.க.,வில் கடும் போட்டி

ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு தி.மு.க.,வில் கடும் போட்டி


ADDED : பிப் 21, 2025 08:58 PM

Google News

ADDED : பிப் 21, 2025 08:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு, தி.மு.க.,வில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தி.மு.க., - எம்.பி.,க்கள் சண்முகம், வில்சன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.தி.மு.க., சந்திரசேகரன் ஆகிய, 6 எம்.பி.,க்களின் பதவிக் காலம், வரும் ஜூலை 24ல் முடிவடைகிறது. அப்பதவிகளுக்கு, ஜூன் மாதம் தேர்தல் நடக்கவுள்ளது.

இதில், தி.மு.க.,வுக்கு நான்கு எம்.பி.,க்கள் உறுதியாக கிடைக்கும். அதில், ஒரு எம்.பி., பதவி, ம.நீ,ம., கட்சி தலைவர் கமலுக்கு வழங்கப்பட உள்ளது.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உடல் நலம் கருதியும், லோக்சபாவில் அவரது மகன் துரை எம்.பி.,யாக இருப்பதாலும், அவருக்கு மீண்டும் எம்.பி., பதவி தர வாய்ப்பில்லை என, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது. தற்போதைய எம்.பி.,க்கள் அப்துல்லா, சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவதால், அவருக்கு மீண்டும் எம்.பி., பதவி நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மற்றொரு எம்.பி., வில்சன், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் நடத்தப்படும் வழக்குகளின் ஆஜராகி வருவதால், அவரது பதவி நீட்டிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இவரை தவிர, மீதமுள்ள மூன்று எம்.பி., பதவிகளை பெற, ஆளும் தி.மு.க.,வில் கடும் போட்டி காணப்படுகிறது. வன்னியர் மற்றும் கவுண்டர் சமுதாயங்களைச் சேர்ந்தோருக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என, அச்சமுதாய நிர்வாகிகள் சிலர், தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இளைஞர் அணி, மகளிரணி, மருத்துவ அணி நிர்வாகிகளும் அப்பதவியை பெற விரும்புகின்றனர். இவர்களுக்கு மத்தியில், சென்னை அண்ணா நகரை சேர்ந்த முக்கிய தொழிலதிபர் ஒருவர், துணை முதல்வர் உதயநிதியிடம் எம்.பி., பதவி கேட்டு கடிதம் கொடுத்துள்ள தகவலும் வெளியாகி உள்ளது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us