ADDED : மார் 24, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பா.ஜ., தலைமையிலான கூட்டணியில், த.மா.கா., மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்கு வேணுகோபால், ஈரோடு தொகுதிக்கு விஜயகுமார் ஆகியோரை வேட்பாளராக நேற்று முன்தினம் வாசன் அறிவித்தார்.
துாத்துக்குடி தொகுதியில் மாநில செயலர் சார்லஸ், மாவட்ட தலைவர் விஜயசீலன், முன்னாள் மாவட்ட தலைவர் கதிர்வேல் ஆகிய மூவரும் போட்டியிட விரும்பினர்.
அவர்கள் மூவரும் சமரசம் செய்து கொண்ட பின், வேட்பாளரை அறிவிப்பதாக வாசன் கூறினார். அதற்காக அவர்களிடம் சமரசம் பேச குழு ஒன்றையும் அமைத்திருந்தார். சமரச பேச்சுக்கு பின், துாத்துக்குடி வேட்பாளராக விஜயசீலனை வாசன் அறிவித்தார்.

