'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்:ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல்
'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்:ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஏப் 28, 2024 02:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில் வாகனங்களால் நேற்று ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .
பள்ளி விடுமுறை, தரைப்பகுதியில் மிரட்டும் கோடை வெயிலை சமாளிக்க குளு,குளு நகரான கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் முதல் ஏராளமான பயணிகள் வாகனங்களில் அணி வகுத்தனர்.
இங்குள்ள பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, ரோஜா பூங்கா, வனச் சுற்றுலாத்தலங்கள், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட பகுதிகளை பார்த்து ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் , ஏரியில் படகு சவாரி செய்தனர். நேற்று காலை முதலே அணி வகுத்த வாகனங்களால் நகரில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

