sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் 100 இடங்களில் இன்று உண்ணாவிரதம்

/

போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் 100 இடங்களில் இன்று உண்ணாவிரதம்

போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் 100 இடங்களில் இன்று உண்ணாவிரதம்

போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் 100 இடங்களில் இன்று உண்ணாவிரதம்


ADDED : ஜூன் 23, 2024 04:31 PM

Google News

ADDED : ஜூன் 23, 2024 04:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:

-கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கம் சி.ஐ.டி.யு., ஓய்வுபெற்ற ஊழியர்கள் இணைந்து, 100 பணிமனைகள் முன் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம் இன்று நடக்கிறது.

அரசு போக்குவரத்துக்கழகத்தில் வரவு - - செலவு வித்தியாச தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சை உடனடியாக தொடங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பஸ் பழுதுபார்ப்பதற்கு தேவையான உதிரி பாகங்களை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் 103 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டததை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டியு., தொழிற்சங்கம், ஓய்வுபெற்ற ஊழியர்கள் அமைப்பு சார்பில் இன்று 24 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

காரைக்குடி மண்டல மத்திய சங்க பொதுச் செயலர் தெய்வீரபாண்டியன் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 100 பணிமனை மையங்களில் இப்போராட்டம் நடக்கவுள்ளது. அரசு, போக்குவரத்து கழக அதிகாரிகள் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டங்கள் தொடரும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us