திருச்சி எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு
திருச்சி எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு
ADDED : ஜூலை 23, 2024 08:58 PM
மதுரை:திருச்சியில் குத்தகை நிலத்திலிருந்து வெளியேற்ற எஸ்.ஆர்.எம்., ேஹாட்டல் வளாகத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது சட்டவிரோதம் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக சுற்றுலா வளர்ச்சி கழகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.
திருச்சி கொட்டப்பட்டுவில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கச் சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம்., குழும ேஹாட்டல் உள்ளது. குத்தகை முடிந்து விட்டதால், காலி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
இதற்கு எதிராக, எஸ்.ஆர்.எம்., ேஹாட்டல் நிர்வாகம், 'நிலத்திலிருந்து எங்களை வெளியேற்றக்கூடாது என உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது.
குத்தகை ஒப்பந்தம் 1996ல் போடப்பட்டது. அங்கு மனுதாரர் தரப்பு நட்சத்திர ேஹாட்டல் கட்டியது. குத்தகைக் காலம் 30 ஆண்டுகள். அது 2024 ஜூன் 13ல் முடிவடைந்தது.
'மனுதாரர் தரப்பு குத்தகை தொகையை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளார். சொத்தில் தொடர்வதற்கு மனுதாரருக்கு உரிமை இல்லை. குத்தகைக் காலம் முடிந்த பின்னரே அவ்வளாகத்தை அதிகாரிகள் கையகப்படுத்தினர். ஒப்பந்தத்திற்கு எதிராக மனுதாரர் வாதிட முடியாது' என, அரசு தரப்பு தெரிவித்தது. அந்த நட்சத்திர ேஹாட்டலில் பலர் தங்கியுள்ளனர். மனுதாரர் 30 ஆண்டுகளாக அங்கு உள்ளார். குத்தகைக் காலம் முடிந்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை. அதை புதுப்பிப்பதற்கான மனுதாரரின் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது. ஜூன் 14ல் அவ்வளாகத்திற்குள் நுழைந்து கையகப்படுத்திய மாவட்ட நிர்வாக அதிகாரிகள், போலீசாரின் நடவடிக்கை சட்டவிரோதமானது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து டி.டி.டி.சி.,மேலாண்மை இயக்குனர் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு நாளை ஜூலை 25ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

