ADDED : மார் 02, 2025 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர் : மகள் உறவு முறை கொண்ட மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த, த.வெ.க., நகர பொறுப்பாளரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், கடத்துார், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுதாகர், 45; த.வெ.க., கடத்துார் நகர பொறுப்பாளர். இவருக்கு மகள் உறவு முறை கொண்ட, 16 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
பிப்., 23 அதிகாலை, 2:00 மணிக்கு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த மாணவிக்கு, சுதாகர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டதால், அவர் அங்கிருந்து தப்பியுள்ளார்.
மாணவி புகார்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து, சுதாகரை நேற்று கைது செய்தனர்.