ADDED : மார் 14, 2025 09:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டம், வரும் 28ம் தேதி, சென்னை திருவான்மியூரில் நடக்க உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம், வரும் 28ம் தேதி காலை 9:00 மணிக்கு, திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடக்கவுள்ளது. இதில் கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். 'இ - மெயில், வாட்ஸாப்' மற்றும் தபால் வாயிலாக, அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பு கடிதம் மற்றும் கட்சி தலைமை வழங்கும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.