பைக் மீது லாரி மோதி விபத்து குள்ளஞ்சாவடியில் தந்தை, மகள் பலி
பைக் மீது லாரி மோதி விபத்து குள்ளஞ்சாவடியில் தந்தை, மகள் பலி
ADDED : செப் 08, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகள் உடல் நசுங்கி இறந்தனர்.
கடலுார் ஆல்பேட்டை, காமராஜ் நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் செல்வராஜ்,40. இவரது மனைவி பிரபா, 36; இவர்களின் மகள் ராஜதீபா,13. இவர்கள் மூவரும், நேற்று மாலை, பைக்கில் குள்ளஞ்சாவடி வழியாக வடலுார் நோக்கி சென்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த தோப்புகொல்லை புத்துமாரியம்மன் கோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது.
இவ்விபத்தில், செல்வராஜ், ராஜதீபா இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். பிரபா காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவலறிந்த குள்ளஞ்சாவடி போலீசார், படுகாயமடைந்த பிரபாவை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.