sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பூங்காவில் இரு குழந்தைகள் மின்சாரம் தாக்கி பலி

/

பூங்காவில் இரு குழந்தைகள் மின்சாரம் தாக்கி பலி

பூங்காவில் இரு குழந்தைகள் மின்சாரம் தாக்கி பலி

பூங்காவில் இரு குழந்தைகள் மின்சாரம் தாக்கி பலி


ADDED : மே 24, 2024 10:06 AM

Google News

ADDED : மே 24, 2024 10:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை சரவணம்பட்டி துடியலுார் சாலையில், சின்னவேடம்பட்டி அருகே ராணுவ வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், 'ராமன் விகார்' எனும் குடியிருப்புகள் உள்ளன.

குடியிருப்பு வளாகத்தில் பூங்காவும் உள்ளது. இப்பூங்காவில், நேற்று மாலை, அங்கு குடியிருக்கும், பிரசாந்த் ரெட்டியின் மகன் ஜீயானஸ், 6, மற்றும் பாலசுந்தர் எனபவரின் மகள் வியோமா பிரியா, 8 ஆகிய இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். பூங்காவில் சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் இருவரும் மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.

குழந்தைகளை மீட்ட பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது, குழந்தைகள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

விசாரணையில், இக்குடியிருப்பு கட்டி விற்பனை செய்யப்பட்ட பின், முறையான பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை எனவும், குழந்தைகள் விளையாடிய சறுக்கு அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு, மின்சாரம் தாக்கியது தெரியவந்துள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us