sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'அந்த இரும்பு கரத்தை இப்போதாவது பயன்படுத்துங்க!'

/

'அந்த இரும்பு கரத்தை இப்போதாவது பயன்படுத்துங்க!'

'அந்த இரும்பு கரத்தை இப்போதாவது பயன்படுத்துங்க!'

'அந்த இரும்பு கரத்தை இப்போதாவது பயன்படுத்துங்க!'


ADDED : மார் 02, 2025 03:02 AM

Google News

ADDED : மார் 02, 2025 03:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:

திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மபொருள் வெடித்து, ஒருவர் இறந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. என்.ஐ.ஏ., - ஏ.டி.எஸ்., உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வரும் நிலையில், 'பேட்டரி ஒயர்' மற்றும் வெடிபொருட்கள் உள்ளதால், பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுவதாக செய்திகள் வருகின்றன.

ஏற்கனவே ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி, சென்னையில் என்.ஐ.ஏ.,வால் கைது செய்யப்பட்டுள்ளார். தி.மு.க., ஆட்சியில் சட்டம் -- ஒழுங்கு சீர்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதுாக்கும் அளவிற்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்து இருப்பது கண்டனத்திற்குரியது.

தமிழகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல், காவல் துறையை தன்னகத்தே வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், தினம் ஒரு வீடியோ ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார். நாடக வீடியோக்கள் மீதான நாட்டத்தை குறைத்து, தமிழகமும், நம் மக்களும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்ற உணர்வோடு,முதல்வர் அடிக்கடி சொல்லி காட்டுகிற அந்த இரும்புக்கரத்தை, இப்போதாவது பயன்படுத்தி செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us