sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வந்தே பாரத் பெண் 'லோகோ பைலட்' மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பு

/

வந்தே பாரத் பெண் 'லோகோ பைலட்' மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பு

வந்தே பாரத் பெண் 'லோகோ பைலட்' மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பு

வந்தே பாரத் பெண் 'லோகோ பைலட்' மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பு


ADDED : ஜூன் 08, 2024 01:35 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில், தெற்கு ரயில்வே வந்தே பாரத் ரயிலின் உதவி பெண், 'லோகோ பைலட்' பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது.

இந்த விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் மட்டுமின்றி சாதாரண குடிமகன்கள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் மூத்த உதவி ரயில் ஓட்டுனராக பணிபுரியும் ஐஸ்வர்யா மேனன் என்பவருக்கு, பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர், 2 லட்சம் மணி நேரம் ரயில் ஓட்டுனராக பணியாற்றி உள்ளார்.

குறிப்பாக, வந்தே பாரத், ஜன சதாப்தி ரயில்களில் ஓட்டுனராக பணியாற்றி உள்ளார். தற்போது, சென்னை சென்ட்ரல் - -விஜயவாடா மற்றும் சென்னை சென்ட்ரல் -- கோவை வந்தே பாரத் ரயில்களில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

அவர் தன் பணியில் காட்டும் சுறுசுறுப்பு மற்றும் ரயில்வே சிக்னலிங் பற்றிய ஆழமான அறிவிற்காக, மூத்த அதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளை பெற்றுஉள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us