sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வி.சி., முன்னாள் நிர்வாகி சலீமிடம் ஈ.டி., விசாரணை

/

வி.சி., முன்னாள் நிர்வாகி சலீமிடம் ஈ.டி., விசாரணை

வி.சி., முன்னாள் நிர்வாகி சலீமிடம் ஈ.டி., விசாரணை

வி.சி., முன்னாள் நிர்வாகி சலீமிடம் ஈ.டி., விசாரணை


ADDED : மே 22, 2024 06:04 AM

Google News

ADDED : மே 22, 2024 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : போதை பொருள் கடத்தல்காரர் ஜாபர் சாதிக்கின் மனைவியை அடுத்து, அவரது சகோதரர் சலீமிடமும் மூன்று மணி நேரம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றனர்.

வெளிநாடுகளுக்கு, 2,000 கோடி ரூபாய்க்கு மேலாக போதை பொருள் கடத்திய வழக்கில், தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், 35 மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேர் கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, ஜாபர் சாதிக் சகோதரர்கள் முகமது சலீம், 23; மைதீன், 23 ஆகியோருக்கு, 'சம்மன்' அனுப்பினர். இதை ஏற்று, சலீம் நேற்று காலை, 11:30 மணியளவில், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள, அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடந்தது.

முகமது சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை துணை செயலராக இருந்தவர். இதையடுத்து, ஜாபர் சாதிக்கின் மற்றொரு சகோதரரும் நடிகருமான மைதீனிடம் விசாரிக்க இருப்பதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us