sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நடப்பு நிதியாண்டில் அதிகரிக்கும் ஜவுளி ஏற்றுமதி

/

நடப்பு நிதியாண்டில் அதிகரிக்கும் ஜவுளி ஏற்றுமதி

நடப்பு நிதியாண்டில் அதிகரிக்கும் ஜவுளி ஏற்றுமதி

நடப்பு நிதியாண்டில் அதிகரிக்கும் ஜவுளி ஏற்றுமதி


ADDED : ஜூன் 23, 2024 12:57 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:கடந்த நிதியாண்டில் சரிவில் இருந்த ஜவுளி ஏற்றுமதி, தற்போது அதிகரித்துள்ளது. கடந்த மே மாத நிலவரப்படி, ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி, 11,320 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.

பருத்தி நுாலிழை, துணி மற்றும் ஜவுளி பொருட்கள், கைவினை ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி கடந்தாண்டு மே மாதம், 7,574 கோடி ரூபாயாக இருந்தது. இந்தாண்டு மே மாதம், 8,420 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, ஏப்., - மே ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும், 16,316 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.

நீண்ட நாட்களாக சரிவில் இருந்த செயற்கை நுாலிழை துணி ஏற்றுமதியும், 5.99 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாத நிலவரப்படி, 3,256 கோடி ரூபாயாக இருந்தது, இந்தாண்டு மே மாதம், 3,450 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏப்., - மே மாதங்களில், 6,523 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், “அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், பொருளாதாரம் சீரானதும், நம் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம் சீராகி விட்டது.

“பஞ்சு, நுால் விலை சீராக இருப்பதால், இனிவரும் மாதங்களிலும், பருத்தி ஆடை மற்றும் செயற்கை நுாலிழை ஆடைகள் ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us