sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கொள்கை உறுதிமொழி ஏற்று கொடியை அறிமுகம் செய்தார் விஜய்

/

கொள்கை உறுதிமொழி ஏற்று கொடியை அறிமுகம் செய்தார் விஜய்

கொள்கை உறுதிமொழி ஏற்று கொடியை அறிமுகம் செய்தார் விஜய்

கொள்கை உறுதிமொழி ஏற்று கொடியை அறிமுகம் செய்தார் விஜய்

2


ADDED : ஆக 23, 2024 02:19 AM

Google News

ADDED : ஆக 23, 2024 02:19 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அதன் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று அறிமுகம் செய்தார்; கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை இந்தாண்டு பிப்ரவரியில் துவக்கினார். கட்சியின் கொடி, கொள்கை விளக்க பாடல் வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கொடியை அறிமுகம் செய்த விஜய், 45 அடி உயர கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, 'தமிழன் கொடி பறக்குது; தலைவன் யுகம் பிறக்குது' என்ற கொள்கை விளக்க பாடலையும் வெளியிட்டார்.

கொடியின் மேலேயும், கீழேயும் சிவப்பு, நடுவில் மஞ்சள் நிறம் இடம் பெற்றுள்ளன. மஞ்சளின் நடுவே வாகை பூவும், அதை சுற்றி 23 சிறிய நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. வாகை பூவின் வலது மற்றும் இடது பக்கத்தில், பிளிரும் போர் யானைகள் உள்ளன.

கொடியை அறிமுகம் செய்த விஜய், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில், 'என்றும் மக்கள் சேவகனாக இருப்பேன்' என, உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

விழாவில் விஜய் பேசியதாவது:

கட்சியின் முதல் மாநாட்டு தேதியை விரைவில் அறிவிப்பேன். மாநாட்டில் கட்சிக் கொடிக்கான விளக்கத்தையும், கட்சியின் கொள்கை குறித்தும் அறிவிப்பேன். கொடிக்கு பின்னால், ஒரு வரலாற்று

தொடர்ச்சி 5ம் பக்கம்

'மக்கள் சேவகனாக இருப்பேன்'


தொண்டர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட உறுதிமொழி:நாட்டின் விடுதலை, மக்கள் உரிமைகளுக்காக, தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நம் அன்னை தமிழ் மொழியை காக்க, உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக் காக்கும் பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகனாக கடமை ஆற்றுவேன்.
ஜாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைப்பிடிப்பேன்.இவ்வாறு உறுதிமொழி ஏற்றார்.








      Dinamalar
      Follow us