ADDED : ஆக 04, 2024 10:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஐ.ஜி.,யாக செந்தில்குமார் நியமிக்கப்பட்டார்.
பவானீஸ்வரி, சென்னை ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் ஐ.ஜி.,யாக பணியாற்றி வந்த செந்தில்குமார், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதற்கு முன், கோவை மாநகரில் துணை கமிஷனராகவும், நீலகிரி மற்றும் ஈரோடில் எஸ்.பி.,யாகவும், சேலத்தில் கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார்.