sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணியை ஜூனில் துவங்க உத்தரவு

/

சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணியை ஜூனில் துவங்க உத்தரவு

சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணியை ஜூனில் துவங்க உத்தரவு

சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணியை ஜூனில் துவங்க உத்தரவு


ADDED : ஏப் 27, 2024 02:35 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை, அடையாளம் காணும் பணியை, ஜூன் முதல் துவங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில், முன்னோடி திட்டமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் சதுப்பு நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் முதல் அனைத்து மாவட்டங்களிலும் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை மேற்கொள்ளும்படி, தமிழக அரசுக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இதுகுறித்து, அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு அறிவுறுத்தியது.

அடையாளம் காணும் பணிகளுக்காக, நிபுணர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ள, அரசுக்கு அனுமதி அளித்த முதல் பெஞ்ச், விசாரணையை, ஜூலை முதல் வாரத்துக்கு தள்ளி வைத்தது.






      Dinamalar
      Follow us