sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் அரசு தரப்பில் தெரிவித்தது என்ன?

/

ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் அரசு தரப்பில் தெரிவித்தது என்ன?

ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் அரசு தரப்பில் தெரிவித்தது என்ன?

ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் அரசு தரப்பில் தெரிவித்தது என்ன?


ADDED : செப் 08, 2024 02:18 AM

Google News

ADDED : செப் 08, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகம் முழுதும் ஆசிரியர்கள், 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 10ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துஉள்ள நிலையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட பேச்சில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை அரசு வெளியிட்டுள்ளது.

அரசு செய்திக்குறிப்பு:

போராட்டம் அறிவித்துள்ள, 'டிட்டோ ஜாக்' எனப்படும், தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகளுடன், தொடக்க கல்வி இயக்குனர் தலைமையில், நேற்று முன்தினம் பேச்சு நடந்தது.

அவர்களிடம் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை அதிகாரிகள் விளக்கினர்.

ஏற்கப்பட்ட கோரிக்கைகள்


 கல்வி மேலாண்மை தகவல் மையம் சார்ந்த பதிவுகளை, ஆசிரியர்களை வைத்து செய்யக்கூடாது என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது. இதற்கென தனியாக 6,000க்கும் மேற்பட்ட நடுநிலை பள்ளிகளில், ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தில், பெரும்பாலான இணையவழி செயல்பாடுகள் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை எளிதாக்க, 29,344 பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையான ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டுள்ளன

 பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை கருத்தாளர்களாக பயன்படுத்தக் கூடாது என்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது

 போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் வழக்கு பதிவு செய்து, நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கையில் உள்ள ஆசிரியர்களின் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்

 உயர் கல்வி படித்த 4,500 பேருக்கு பதவி உயர்வுக்கான பின்னேற்பு அனுமதி வழங்கும் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது

 58 மாவட்ட கல்வி அலுவலகங்களில், பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவிக்க, தற்போதைய நிலையில் தேவை எழவில்லை. மற்ற கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us