sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அறநிலையத்துறையின் பொறுப்பு என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி

/

அறநிலையத்துறையின் பொறுப்பு என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி

அறநிலையத்துறையின் பொறுப்பு என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி

அறநிலையத்துறையின் பொறுப்பு என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி

34


ADDED : செப் 14, 2024 06:38 AM

Google News

ADDED : செப் 14, 2024 06:38 AM

34


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : கோவில்கள் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை கையாள்வதை தவிர, கோவில்களை பராமரிப்பதில் அறநிலையத்துறையின் பொறுப்புகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய இணை கமிஷனருக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி முன்னீர்பள்ளம் சுந்தரவேல் தாக்கல் செய்த பொதுநல மனு: சேரன்மகாதேவியில் ராமசாமி பெருமாள் கோவில் அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ளது. வளாகத்தில் கற்கள், முட்செடிகள் நிரம்பியுள்ளன. தரைத்தளம் அமைக்க தரமான கட்டுமான பொருட்களை பயன்படுத்தவில்லை. பக்தர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். விஷ்ணு சகஸ்ரநாமம், வெங்கடேச சுப்ரபாதம், திருநாமம் தினமும் காலை, மாலை ஒலிக்க வேண்டும். கோவில் நடை திறக்கும் மற்றும் நடை சாற்றும் நேரம் குறித்து அறிவிப்பு இடம்பெற வேண்டும்.

கோவிலை புனரமைக்க வலியுறுத்தி திருநெல்வேலி கலெக்டர், அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: கோவில்கள் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை கையாள்வதை தவிர, கோவில்களை பராமரிப்பதில் அறநிலையத்துறையின் பொறுப்புகள் குறித்து, அதன் திருநெல்வேலி இணை கமிஷனர் அக்., 15ல் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us