sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

த.மா.கா.,வில் யார் யார்?

/

த.மா.கா.,வில் யார் யார்?

த.மா.கா.,வில் யார் யார்?

த.மா.கா.,வில் யார் யார்?


ADDED : மார் 22, 2024 11:03 PM

Google News

ADDED : மார் 22, 2024 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மூன்று தொகுதிகளில் த.மா.கா., போட்டியிட உள்ளது.

ஈரோடு தொகுதிக்கு அம்மாவட்ட தலைவர் விஜயகுமார்; ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்கு மாவட்ட தலைவர் வேணுகோபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுஉள்ளனர்.

வழிபாடு


சென்னை த.மா.கா., தலைமையகத்தில், கட்சியின் தலைவர் வாசன் அளித்த பேட்டி:

இரு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். வரும், 24ம் தேதி துாத்துக்குடி தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படுவார். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆதரவோடு, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நிலையை, த.மா.கா., ஏற்படுத்தும்.

வரும் 27ம்தேதி, சர்ச், மசூதி, தர்காவுக்கு செல்கிறேன். அங்கு வழிபாடு நடத்திய பின், அடுத்த நாள் பிரசாரம் துவங்கி, 21 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளேன். எங்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான சைக்கிள் சின்னம் கிடைத்துள்ளது.

இவ்வாறு கூறினார்.

கடந்த 1996 சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியை உடைத்து, த.மா.கா., என்ற புதிய கட்சியை மூப்பனார் துவக்கினார்.

தி.மு.க.,வுடன் த.மா.கா., கூட்டணி அமைத்து லோக்சபா, சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. அப்போது, த.மா.கா.,வுக்கு சைக்கிள் சின்னம் கிடைத்தது.

மகிழ்ச்சி


வாசன் தலைமையில் த.மா.கா., துவங்கிய பின், சந்திக்கிற இந்த லோக்சபா தேர்தலில் முதல் முறையாக சைக்கிள் சின்னம் கிடைத்துள்ளதால் வாசன் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இறக்கை கட்டி பறக்குதய்யா...'வாசன்' சைக்கிளு...


கடந்த 1996 சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியை உடைத்து, த.மா.கா., என்ற புதிய கட்சியை மூப்பனார் துவக்கினார். தி.மு.க.,வுடன் த.மா.கா., கூட்டணி அமைத்து லோக்சபா, சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.
அப்போது, த.மா.கா.,வுக்கு சைக்கிள் சின்னம் கிடைத்தது. வாசன் தலைமையில் த.மா.கா., துவங்கிய பின், சந்திக்கிற இந்த லோக்சபா தேர்தலில் முதல் முறையாக சைக்கிள் சின்னம் கிடைத்துள்ளதால் வாசன் மகிழ்ச்சி அடைந்துள்ளார். -கட்சி அலுவலகத்திற்கு வந்த தொண்டர்களுக்கு விருந்து அளித்தார்.
அசோகா தெருவில் தொண்டர்கள் சூழ, வாசன் சைக்கிள் சவாரி மேற்கொண்டார். சைக்கிள் முன் வேட்பாளர்கள் வேணுகோபால், விஜயகுமார் ஆகியோருடன் நின்று புகைப்படமும் எடுத்து கொண்டார். அப்போது அங்கிருந்த மாவட்ட நிர்வாகி பட்டுக்கோட்டை பூபதி, 'இறக்கை கட்டி பறக்குதய்யா வாசன் சைக்கிளு' என, பாட்டுப்பாடி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.








      Dinamalar
      Follow us