செங்கோட்டை - ஈரோடு ரயில் கோவை வரை நீட்டிக்கப்படுமா?
செங்கோட்டை - ஈரோடு ரயில் கோவை வரை நீட்டிக்கப்படுமா?
ADDED : ஜூன் 22, 2024 05:35 PM
திருப்பூர் :
'தினமும் செங்கோட்டையில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலை, திருப்பூர் வழியாக கோவை வரை நீட்டிக்க வேண்டும்,' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தினமும் காலை, 5:00 மணிக்கு செங்கோட்டையில் புறப்படும் ரயில் - எண்:16846, தென்காசி, திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், கரூர் வழியாக மதியம், 3:00 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது.
தற்போது, திருநெல்வேலியில் இருந்து திருப்பூர், கோவைக்கு காலை, இரவு மட்டுமே ஒரு ரயில் உள்ளது. காலை ரயில் மட்டுமே பெரும்பாலான ஸ்டேஷன்களில் நிற்கிறது. இரவு ரயில் - எண்: 22667, குறிப்பிட்ட ஸ்டேஷன்களில் மட்டுமே நிற்பதால், பலரும் பயன்படுத்த முடிவதில்லை.
செங்கோட்டை - ஈரோடு ரயிலை திருப்பூர் வழியாக கோவை வரை நீட்டித்தால், தென்மாவட்டங்களை சேர்ந்த மேற்கு மண்டல பயணியர் பலர் பயன் பெறுவர்.

