sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா: தி.மு.க.,

/

எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா: தி.மு.க.,

எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா: தி.மு.க.,

எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா: தி.மு.க.,

1


ADDED : பிப் 24, 2025 05:29 AM

Google News

ADDED : பிப் 24, 2025 05:29 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,: ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:

மகா சிவராத்திரியை மிகச் சிறப்பாக தமிழக கோவில்களில் கொண்டாட வேண்டும் என்பதற்காக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கொண்டாட்டத்தை துவங்கினோம். இந்தாண்டு, தமிழகத்தின் 9 பிரதான கோவில்களில், மகா சிவராத்திரியை பிரமாண்டமாக கொண்டாட உள்ளோம். ஆன்மிகத்தையும் போற்றும் ஆட்சி தான் தி.மு.க., ஆட்சி.

தமிழகத்தில் நடக்கும் தி.மு.க., ஆட்சி, நீதி தேவதையின் ஆட்சி. நீதிமன்றம் என்ன கட்டளையிடுகிறதோ, அதை செயல்படுத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அவர் சுட்டிக் காட்டும் திசையை நோக்கி பயணம் செல்கிறோம். தி.மு.க., ஆட்சியின் குறைகளை சுட்டிக் காட்டுவதாக நினைத்து, எதற்கெடுத்தாலும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வெள்ளை அறிக்கை கேட்கிறார். அவர், ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, எத்தனை முறை வெள்ளை அறிக்கை வெளியிட்டார் என்பதை சொல்ல வேண்டும்.

தமிழக ஹிந்து அறநிலையத் துறையின் பெயரை மாற்ற வேண்டும் என, காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்திருக்கிறார். முதல்வரிடம் எடுத்துச் செல்லப்படும்; வாய்ப்பு இருந்தால் அவர் கோரிக்கையை நிறைவேற்றுவார்.

இவ்வாறு சேகர்பாபு கூறினார்.






      Dinamalar
      Follow us