sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழர்கள் மீது வன்மம் காட்டும் மோடி எந்த முகத்துடன் ஓட்டுக்கேட்டு வருகிறார்: மதுரை பிரசாரத்தில் ஸ்டாலின் கேள்வி

/

தமிழர்கள் மீது வன்மம் காட்டும் மோடி எந்த முகத்துடன் ஓட்டுக்கேட்டு வருகிறார்: மதுரை பிரசாரத்தில் ஸ்டாலின் கேள்வி

தமிழர்கள் மீது வன்மம் காட்டும் மோடி எந்த முகத்துடன் ஓட்டுக்கேட்டு வருகிறார்: மதுரை பிரசாரத்தில் ஸ்டாலின் கேள்வி

தமிழர்கள் மீது வன்மம் காட்டும் மோடி எந்த முகத்துடன் ஓட்டுக்கேட்டு வருகிறார்: மதுரை பிரசாரத்தில் ஸ்டாலின் கேள்வி

11


ADDED : ஏப் 10, 2024 06:44 AM

Google News

ADDED : ஏப் 10, 2024 06:44 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''10 ஆண்டுகளாக தமிழர்களை மதிக்காத, வளர்சித்திட்டங்களை செயல்படுத்தாமல் வஞ்சித்து தமிழர்கள் மீது வன்மம் காட்டும் பிரதமர் மோடி எந்த முகத்துடன் ஓட்டுக்கேட்டு இங்கே வருகிறார்'' என மதுரையில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மதுரை மா.கம்யூ., வேட்பாளர் வெங்கடேசன், சிவகங்கை காங்., வேட்பாளர் கார்த்தி ஆகியோரை ஆதரித்து மதுரை பாண்டி கோயில் அருகே தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அமைச்சர் மூர்த்தி வரவேற்றார். அமைச்சர்கள் பெரியசாமி, பெரியகருப்பன், தியாகராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மதுரைநகர் செயலாளர் தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் ஸ்டாலின் பேசியதாவது:

அடுத்து வரும் பிரதமர் 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பவராக, சமூக நீதி மீது அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். ஜனநாயகம், அரசியல் சட்டம், மதசார்பின்மையை மதிக்கும் பிரதமர் நமக்கு வேண்டும். தமிழகத்தின் மீது உண்மையான பாசம் கொண்டவராக இருக்க வேண்டும்.

தற்போதைய பிரதமர் மோடி தமிழகத்திற்கு 10 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் செய்து கொடுக்காதவர். வெள்ளப் பாதிப்பிற்கு வராமல் இன்று ஓட்டு கேட்டு தமிழகத்திற்கு வந்துள்ளார். எந்த முகத்துடன் இங்கு வருகிறார். பா.ஜ., ஆட்சியில் இல்லாத கேரளா, கர்நாடகா, டில்லி, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை குறிவைத்து வஞ்சித்து வருகிறார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் அமலாக்கத்துறை ஐ.டி., சி.பி.ஐ., கவர்னர்களை வைத்து மிரட்டுகிறார்.

பெண் சக்தி, பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசும் மோடி, பா.ஜ., எம்.பி. பிரிஜ் பூஷனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் விட்டபோது வாய் திறக்கவில்லை. மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தையும் மவுனமாக தான் மோடி வேடிக்கை பார்த்தார். இப்படிப்பட்ட காட்டாட்சிதான், பா.ஜ., ஆட்சி. நாட்டில் மதவெறியை விதைத்து பிளவுபடுத்துகிறார். அவரை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

திட்டங்களை தடுத்தோமா


தமிழகத்திற்கான திட்டங்களை நாங்கள் தடுத்தோம் என பெரிய பொய் சொல்கிறார். சேது சமுத்திரத் திட்டம் முடக்கம், மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட பா.ஜ., தடுத்த வளர்ச்சித் திட்டங்களை பட்டியலிடலாம். தற்போது ஒரு ரூபாய் வரிக்கு 29 பைசா திருப்பிக் கொடுத்து நிதி நெருக்கடியை பா.ஜ., உருவாக்குகிறது. பேரிடர் நிதியைக்கூட கொடுக்காமல் நாங்கள் மக்களுக்குக் கொடுத்த நிதிக்குக் கூட, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை 'பிச்சை' என சொல்லி ஏளனம் பேச வைக்கிறது மத்திய அரசு.

ஆனால் ஐ.மு.கூட்டணியில் ரூ. 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கல்விக் கடன்கள் வழங்கப்பட்டது, ரூ. 65 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி,ரூ. 56,644 கோடியில் மேம்பாலங்கள்,நெசவுத் தொழிலுக்கு இருந்த 'சென்வாட்' வரி நீக்கம் என பெரிய பட்டியலே உள்ளது. மோடியால் இப்படி நிறைவேற்றிய திட்டங்களை சொல்ல முடியுமா.

பறவைகள் சரணாலயமா


தேர்தல் சீசனுக்கு மட்டும் அவர் வருவதற்கு தமிழகம் பறவைகள் சரணாலயமா. தமிழர்கள் மீது அவருக்கு ஏன் இத்தனை வன்மம். நாங்கள் இரண்டாம் தரக் குடிமக்களா. உங்களால் எப்படி ஓட்டுக் கேட்டு வரமுடிகிறது.

மதுரையில் கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கு, சிவகங்கையில் நாகரீகத்தின் தொட்டிலாக இருக்கும் கீழடி உள்ளிட்ட திட்டங்களை நிதிநெருக்கடியிலும் செய்துள்ளோம்.மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் மதவாதத்திற்குதான் நாங்கள் எதிரி. மதத்திற்கு எதிரிகள் அல்ல.

நான் முதல்வராக பொறுப்பேற்ற பின் ஹிந்து சமய அறநிலையத்துறை விழாக்களில் தான் அதிகம் பங்கேற்றேன். பதவிக்கு வந்து 1069 நாட்களில் 1556 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம். ரூ.6 ஆயிரத்து 82 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளது.1250 கோயில்களுக்கு திருப்பணிகள் செய்ய தலா ரூ. 2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட திட்டங்களை சொல்லுவேன். மக்களைப் பண்படுத்தத்தான் ஆன்மிகத்தைப் பயன்படுத்த வேண்டும். பா.ஜ., மக்களைப் பிளவுபடுத்த பயன்படுத்துகிறது.

நாட்டை மீண்டும் வளர்ச்சிப்பாதையில் நடைபோட பல்வேறு வாக்குறுதிகளை காங்., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அதில் தி.மு.க., கூறிய வாக்குறுதிகளும் எதிரொலித்துள்ளது. ஆனால் தி.மு.க., இமேஜை பாதிக்கும் வகையில் வடமாநிலங்களில் பா.ஜ., பிரசாரம் செய்கிறது.

பா.ஜ.,'பி' டீம் பழனிசாமி


தமிழகத்திற்கு வந்தால் 'வணக்கம். எனக்கு இட்லி பொங்கல் பிடிக்கும். தமிழ் பிடிக்கும்' என கூறி தமிழுக்கு மோடி துரோகம் செய்கிறார். கவர்னர் ரவியை வைத்து கால்டுவெல், ஜி.யு.போப்பை விமர்சித்து தமிழகத்தில் விதண்டவாதம் பேச வைக்கிறார். தமிழக விரோத செயல்களை செய்துவிட்டு வாயால் வடை சுடுகிறார். தமிழகத்திற்கு பா.ஜ., இழைத்த அத்தனை துரோகங்களுக்கும் துணையாக இருந்தவர் பழனிசாமி.

பா.ஜ., வின் 'பி' டீம் ஆக இருந்து ஓட்டுக்களை பிரிக்கிறார். துரோகத்தின் உருவம், முதுகெலும்பு இல்லாதவர். பதவியை பெற்று சசிகலா, தினகரன், பன்னீர்செல்வத்துக்கு துரோகம் செய்தவர். பா.ஜ.வுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளார். அவர் தமிழகத்திற்கு மட்டுமல்ல நாட்டுக்கே எதிரி. அ.தி.மு.க.,வையும், தமிழகத்தை வஞ்சிக்கும் பா.ஜ.,வையும் இத்தேர்தலில் வீழ்த்த வேண்டும். இவ்வாறு பேசினார்.






      Dinamalar
      Follow us