sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'மில்லட் மகாராணி' பட்டம் சூடும் போட்டியில் பங்கேற்க ஆர்வமுடன் பதிவு செய்யும் பெண்கள்

/

'மில்லட் மகாராணி' பட்டம் சூடும் போட்டியில் பங்கேற்க ஆர்வமுடன் பதிவு செய்யும் பெண்கள்

'மில்லட் மகாராணி' பட்டம் சூடும் போட்டியில் பங்கேற்க ஆர்வமுடன் பதிவு செய்யும் பெண்கள்

'மில்லட் மகாராணி' பட்டம் சூடும் போட்டியில் பங்கேற்க ஆர்வமுடன் பதிவு செய்யும் பெண்கள்


ADDED : ஏப் 20, 2024 10:44 PM

Google News

ADDED : ஏப் 20, 2024 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சிறுதானிய உணவு வகைகளை ஊக்கப்படுத்த, 'தினமலர்' நாளிதழ் மற்றும் 'ஆசிர்வாத் மில்லெட்ஸ்' நிறுவனம் இணைந்து, 'மில்லட் மகாராணி' பட்டம் வழங்கு வதற்காக மாபெரும் சிறுதானிய சமையல் போட்டியை, வரும் 28ம் தேதி சென்னை சேப்பாக்கம், கலைவாணர் அரங்கில் நடத்துகின்றன. இதில் பங்கேற்க பெண்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

தமிழகம் உட்பட நாடு முழுதும், 'மில்லட்' எனப்படும் கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, சாமை, தினை உள்ளிட்ட சிறுதானிய உணவு வகை பயன்பாடு அதிகரித்து வருகிறது.

ஊட்டச்சத்து


மத்திய அரசு, ராணுவ வீரர்கள் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து திட்ட உணவு பட்டியலில், சிறுதானிய வகைகளை சேர்த்துள்ளது. தமிழக அரசு, ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டத்தை, நீலகிரி மாவட்டத்தில் சோதனை முயற்சியாக துவக்கிஉள்ளது.

சமையல்


சிறுதானிய உணவு சமைப்பதில் பெண்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், சமையல் திறனை உலகறிய செய்து, அனைவருக்கும் ஆரோக்கிய மந்திரத்தை பகிரவும், 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஆசிர்வாத் மில்லெட்ஸ் இணைந்து, 'மில்லட் மகாராணி' பட்டம் வழங்குவதற்கான போட்டியை, வரும் 28ம் தேதி சென்னை சேப்பாக்கம், கலைவாவனர் அரங்கில் நடத்துகின்றன.

இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் பெண்கள், தங்கள் வீட்டிலேயே சிறுதானியங்களில், சுவையான, 'டிரெண்டியான' உணவை சமைத்து எடுத்து வர வேண்டும்.

மதிப்பெண்


பிரபல சமையல் நிபுணர், 'செப்' தாமு மற்றும் சித்த மருத்துவ டாக்டர் கு.சிவராமன் ஆகியோரது குழுவினர், சிறந்த தானிய உணவை தேர்வு செய்வர். ஆசிர்வாத் மில்லட் மாவு வகையில், உணவு சமைத்து வருவோருக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.

காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை போட்டி நடக்கும். இதில், 'பெரும் நலம் தரும் சிறுதானியங்கள்' தலைப்பில் டாக்டர் சிவராமன் சிறப்புரை ஆற்றுகிறார்.

நிகழ்ச்சியில் பங்கேற்க பலர் ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர். நிகழ்ச்சிக்கு, 'கிப்ட் ஸ்பான்சராக' சத்யா நிறுவனம், 'அசோசியேட் ஸ்பான்சராக' மாம்பலம் ஐயர்ஸ் நிறுவனம், உணவு ஸ்பான்சராக மாதம்பட்டி பாகஷாலா நிறுவனம் இணைந்து செயல்பட உள்ளன.

முன்பதிவுக்கு கவனிக்கவும்


'மில்லட் மகாராணி' போட்டியில் பங்கேற்க விரும்புவோர், தங்களின் பெயர், மொபைல் போன் எண், முகவரியை, 84897 55777 என்ற மொபைல் போன் எண்ணுக்கு, 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பி, முன்பதிவு செய்ய வேண்டும். போட்டிக்கு இன்னும் ஒரு வாரமே அவகாசம் உள்ளது.இதனால், பலரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை முன்பதிவு செய்யாதவர்கள், விரைந்து தங்களின் விபரங்களை அனுப்பி, முன்பதிவு செய்து கொள்ளலாம்.



என்னென்ன பரிசுகள்


முதல் பரிசு பெறுபவருக்கு, 'மில்லட் மகாராணி' பட்டம் வழங்கப்படும். இது தவிர, 50,000 ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படும்.முதல் மூன்று இடங்களுக்குள் வருவோருக்கு, 'ரெப்ரிஜிரேட்டர், டிவி, வாஷிங் மெஷின்' வழங்கப்படும். மேலும், 25 நபர்களுக்கு கிரைண்டர் அல்லது மிக்சி பரிசாக வழங்கப்படும்.








      Dinamalar
      Follow us