ADDED : ஜன 05, 2024 01:38 AM
கோவை:கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் அமர், 29, கார் டிரைவர். இந்நிலையில், அமரை நேற்று முன்தினம் ஒருவர் மொபைல் போன் வாயிலாக அழைத்து தன் பெயர் டாக்டர் பிரவீன் மேனன் கார் வாடகைக்கு வேண்டும் என்று கேட்டார். தொடர்ந்து அமரை அவர் கோவை ரேஸ்கோர்சில் உள்ள மருத்துவமனைக்கு வருமாறு கூறினார். அமரும் தன் காருடன் அங்கு சென்றார். அப்போது அங்கிருந்த பிரவீன் மேனன் காரில் ஏறி ரேஸ்கோர்சில் உள்ள நட்சத்திர ேஹாட்டலுக்கு சென்றார்.
காரில் இருந்து இறங்கிய அவர் அமரிடம் தன் வங்கி கணக்கில் பணம் குறைவாக இருப்பதாகவும் 'கூகுள் பே' வாயிலாக 10,000 ரூபாய் அனுப்பி வைத்தால் கையில் பணத்தை தருவதாகவும் கூறினார். பின் வங்கி கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு அமர் கையில் 10,000 ரூபாயை கொடுத்தார். பின், பிரவீன் மேனன் ஒரு போன் செய்து தருவதாக கூறி, அமரின் மொபைல் போனை வாங்கி திடீரென போனுடன் மாயமானார்.
உடனே அமர் தன் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட போது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. அமர் நட்சத்திர ேஹாட்டலுக்குள் விசாரித்த தில் அப்படி யாரும் ஓட்டலுக்கு வரவில்லை என ேஹாட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
சந்தேகம் அடைந்த அமர் அந்த நபர் தந்த 10,000 ரூபாய் நோட்டுகளை சோதித்ததில் அவை கள்ள நோட்டுகள் என்பது தெரிந்தது. அமர் புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.