ADDED : மார் 11, 2026 04:21 AM

சென்னை: தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, இம்மாதம் 2-ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்க உள்ளன.
மாநிலம் முழுதும் அமைக்கப்பட்டுள்ள 4,219 மையங்களில், 9 லட்சத்து 9,002 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதில் 25,801 தனித்தேர்வர்கள், 395 சிறைக் கைதிகள் அடங்குவர்.
தேர்வு முடிவுகள் மே 20-ல் வெளியிடப்படும். தேர்வு குறித்து சந்தேகம் இருந்தால், 94983 83075, 94983 83076 ஆகிய மொபைல் எண்களையும், பள்ளிக்கல்வித் துறையின் 14417 என்ற இலவச உதவி மைய எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

