உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 24, 2026 04:25 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, 11 நகரங்களில், 105 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது.
இதில் வேலுாரில் அதிகபட்சமாக, 40.7 டிகிரி செல்ஷியஸ்; கரூர், மதுரை நகரங்களில் தலா, 40 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.
இதற்கு அடுத்தபடியாக, கோவை, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், பாளையங்கோட்டை, திருப்பத்துார், திருச்சி, திருத்தணி ஆகிய நகரங்களில், 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
