விபத்தில் சிக்கிய 12,628 பேர் ரோந்து போலீசாரால் மீட்பு
விபத்தில் சிக்கிய 12,628 பேர் ரோந்து போலீசாரால் மீட்பு
ADDED : ஆக 08, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நெடுஞ்சாலைகளில் செயின் பறிப்பு, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் பணியிலும், சாலை விபத்துகளில் சிக்கி தவிப்போரை மீட்கும் நடவடிக்கையிலும், நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
நெடுஞ்சாலை ரோந்து போலீசார், ஓராண்டில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் விபத்தில் சிக்கிய, 12,628 பேரை மீட்டுள்ளனர். அதுவும், உயிர் பிழைப்பதற்கான 'கோல்டன் ஹவர்' எனப்படும், ஒரு மணி நேரத்தில் மீட்டுள்ளனர்.