sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இலங்கையில் இருந்து திரும்பிய 13 மீனவர்கள்

/

இலங்கையில் இருந்து திரும்பிய 13 மீனவர்கள்

இலங்கையில் இருந்து திரும்பிய 13 மீனவர்கள்

இலங்கையில் இருந்து திரும்பிய 13 மீனவர்கள்


ADDED : மார் 21, 2025 12:21 AM

Google News

ADDED : மார் 21, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட, 13 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர்.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால் பகுதியை சேர்ந்த, 13 மீனவர்கள், கடந்த ஜனவரி 27ம் தேதி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில், காரைக்காலை சேர்ந்த செந்தமிழ், 27, என்பவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. கைதான மீனவர்கள், இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், 13 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இலங்கையில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள், இலங்கை அரசுடன் பேச்சு நடத்தினர். அதைத்தொடர்ந்து, இலங்கை நீதிமன்றம் மீனவர்களை விடுவித்தது.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள், விமானத்தில் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர். அங்கிருந்து அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

துப்பாக்கி சூட்டில் காலில் காயமடைந்த மீனவர் மட்டும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us