sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து பணம் அபேஸ் செய்தவர் கைது 15 போலி ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல்

/

ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து பணம் அபேஸ் செய்தவர் கைது 15 போலி ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல்

ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து பணம் அபேஸ் செய்தவர் கைது 15 போலி ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல்

ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து பணம் அபேஸ் செய்தவர் கைது 15 போலி ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல்

1


ADDED : அக் 01, 2024 06:07 AM

Google News

ADDED : அக் 01, 2024 06:07 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில், ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க சென்றவருக்கு உதவுவது போல் நடித்து, பணத்தை அபேஸ் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், பூலாமேடு கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர், நேற்று முன்தினம், சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க சென்றார். அங்கிருந்த மர்ம நபர், அவருக்கு உதவி செய்வதுபோல் நடித்து, ஏ.டி.எம்., மில் பணம் எடுக்க முயற்சித்து, அக்கவுண்டில் பணம் இல்லை என கூறி, வேறு கார்டை மாற்றி கொடுத்துவிட்டு, சென்றுவிட்டார்.

அடுத்த சில நிமிடங்களில், விஸ்வநாதன் கணக்கில் இருந்து ரூ. 7,500 பணம் எடுத்ததாக அவரது மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., வந்தது. அதிர்ச்சி அடைந்த விஸ்வநாதன், சிதம்பரம் நகர போலீசில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள திருநன்றியூரை சேர்ந்த டேவிட் (எ) கலைவாணன், 56; என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் கலைவாணன், ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க வருவோருக்கு உதவுவது போல நடித்து, கார்டை மாற்றி கொடுத்து பலரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்தது தெரியவந்தது.

கலைவாணனிடமிருந்து 6 ஆயிரம் பணம் மற்றும் 15 போலி ஏ.டி.எம்., கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us