sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சாத்தனூர் அணை வெள்ளத்தில் 150 முதலைகள் எஸ்கேப்; ரகசியம் காத்த வனத்துறை!

/

சாத்தனூர் அணை வெள்ளத்தில் 150 முதலைகள் எஸ்கேப்; ரகசியம் காத்த வனத்துறை!

சாத்தனூர் அணை வெள்ளத்தில் 150 முதலைகள் எஸ்கேப்; ரகசியம் காத்த வனத்துறை!

சாத்தனூர் அணை வெள்ளத்தில் 150 முதலைகள் எஸ்கேப்; ரகசியம் காத்த வனத்துறை!

30


ADDED : டிச 23, 2024 06:50 AM

Google News

ADDED : டிச 23, 2024 06:50 AM

30


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சாத்தனுார் அணை மற்றும் முதலை பண்ணையில் இருந்து பெண்ணையாற்றில், 150க்கும் மேற்பட்ட முதலைகள் வெளியேறியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் அணை அருகே, ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய முதலை பண்ணை உள்ளது. அணையிலும் ஏராளமான முதலைகள் வசிக்கின்றன. கோடைக் காலங்களில் அணையில் இருந்து வெளியே வந்து, கரைகளில் முதலைகள் இரை தேடுவது வழக்கம். அத்தகைய நேரங்களில் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுவர். கடந்த 2ம் தேதி கனமழையால், தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 54,000 கன அடிக்கு மேல் வெள்ள உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

இதனால், தென்பெண்ணை ஆற்றில், 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேறி கடலுக்கு சென்றது.அப்போது, சாத்தனுார் அணையில் இருந்தும், அதனருகே உள்ள பண்ணையில் இருந்தும், 150க்கும் மேற்பட்ட முதலைகள் வெள்ளத்தில் வெளியேறி உள்ளன.

இவை, ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தஞ்சம் அடைந்துள்ளன. பல முதலைகள், முகத்துவாரம் வழியாக கடலுக்கும் சென்று உள்ளன.

வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில், நீர் நிலைகளில் தஞ்சம் அடைந்த முதலைகள், வெளியே தலைகாட்ட துவங்கியுள்ளன. கடலுாரில் மட்டும் இரண்டு முதலைகள் பிடிபட்டு உள்ளன. முதலைகள் வெளியேறியதால், ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள், குழந்தை கள், நீர்நிலைகளை பயன்படுத்துவோர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மூடி மறைத்தனர்

சாத்தனுாரில் இருந்து முதலைகள் அதிக அளவில் வெளியேறிய நிலையில், அந்த தகவலை நீர்வளத்துறை மற்றும் வனத்துறையினர் மூடி மறைத்ததாக புகார் எழுந்து உள்ளது. இது குறித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில், பெண்ணையாற்றை ஒட்டிய நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு, நீர் வளத்துறை மற்றும் வனத்துறை, உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us