sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'சைபர்' குற்றத்தடுப்பு துாதுவர்களாக 15,000 ஆட்டோ ஓட்டுநர்கள் நியமனம்

/

 'சைபர்' குற்றத்தடுப்பு துாதுவர்களாக 15,000 ஆட்டோ ஓட்டுநர்கள் நியமனம்

 'சைபர்' குற்றத்தடுப்பு துாதுவர்களாக 15,000 ஆட்டோ ஓட்டுநர்கள் நியமனம்

 'சைபர்' குற்றத்தடுப்பு துாதுவர்களாக 15,000 ஆட்டோ ஓட்டுநர்கள் நியமனம்


ADDED : ஜன 02, 2026 01:53 AM

Google News

ADDED : ஜன 02, 2026 01:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சைபர் குற்றங்கள் குறித்து, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, 15,000 ஆட்டோ ஓட்டுநர்கள், துாதுவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து, மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையக டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் கூறியதாவது:

'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்யும், சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக, 1930 என்ற எண்ணில், புகார் அளிக்கலாம். இந்த எண்ணை மாநிலம் முழுதும் உள்ள நபர்களுக்கு தெரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மேலும், 30 வகையான சைபர் குற்றங்கள் குறித்து, மக்களுக்கு எளிதாக புரியும்படி, கதை வடிவிலான புத்தகம் வெளியிட்டுள்ளோம்.

டிஜிட்டல் கைது குறித்து, சினிமா தியேட்டர்கள் மற்றும் ரேடியோ வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், மாநிலம் முழுதும், 1930 என்ற எண் குறித்து, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, சைபர் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு துாதுவர்களாக, 15,000 ஆட்டோ ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு, சைபர் குற்றங்கள், அதில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது குறித்து, மக்களிடம் எடுத்துரைக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆட்டோக்களில், 1930 என்ற எண் 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us