sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

45 மாதத்தில் 17.50 லட்சம் கார்டுகள் வினியோகம்

/

45 மாதத்தில் 17.50 லட்சம் கார்டுகள் வினியோகம்

45 மாதத்தில் 17.50 லட்சம் கார்டுகள் வினியோகம்

45 மாதத்தில் 17.50 லட்சம் கார்டுகள் வினியோகம்


ADDED : ஜன 29, 2025 12:44 AM

Google News

ADDED : ஜன 29, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த 45 மாத தி.மு.க., ஆட்சியில், புதிதாக, 17.50 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில், ஒரு நெல்மணி கூட மழையில் நனைந்து வீணாகக்கூடாது என்பதற்காக, 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு செமி கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், 376 அரவை ஆலைகளில் நெல் அரைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, 700 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு, அந்தந்த மாவட்ட கலெக்டரை தலைவராகக் கொண்ட, ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அனுமதி வழங்கலாம்.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொது வினியோக திட்டத்தில், 3.76 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுகிறது. ஆனால், நம் மாநிலத்தில் உற்பத்தி போதுமானதாக இல்லை. இதனால், ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து அரிசியை விலை கொடுத்து வாங்கி, மக்களுக்கு வினியோகம் செய்கிறோம்.

தமிழகத்தில், 100 அமுதம் அங்காடிகளை சீரமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதில், சென்னையில் இரு அமுதம் அங்காடிகள் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. இங்கு பொருட்கள் வாங்கினால், 1,000 முதல், 1,500 ரூபாய் வரை மாதந்தோறும் சேமிப்பு ஏற்படும். தேவைப்படும் இடங்களில், அமுதம் அங்காடிகளை திறக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

- சக்கரபாணி,

உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்






      Dinamalar
      Follow us