sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தரங்கம்பாடி கோட்டையில் இருந்த 17ஆம் நூற்றாண்டு வாள் மாயம்

/

தரங்கம்பாடி கோட்டையில் இருந்த 17ஆம் நூற்றாண்டு வாள் மாயம்

தரங்கம்பாடி கோட்டையில் இருந்த 17ஆம் நூற்றாண்டு வாள் மாயம்

தரங்கம்பாடி கோட்டையில் இருந்த 17ஆம் நூற்றாண்டு வாள் மாயம்


ADDED : டிச 26, 2025 05:06 PM

Google News

ADDED : டிச 26, 2025 05:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: தரங்கம்பாடி கோட்டை அருங்காட்சியகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரும்பு வாள் ஒன்று மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் 16ம் நூற்றாண்டில் டென்மார்க் ஆட்சியாளர்களின் டேனிஷ் கோட்டை அமைந்துள்ளது. தற்போது தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இந்த கோட்டையில் புராதன பொருட்களை பாதுகாக்கும் அருங்காட்சியகம் உள்ளது. கோட்டையில் தொல்லியல் துறை சார்பில் 6 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது இந்த கோட்டையின் பராமரிப்பு பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் கோட்டை அருங்காட்சியகத்தில் கண்ணாடி பெட்டியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த 17 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட இரும்பினால் ஆன ஒன்றரை அடி நீளம் உள்ள கைப்பிடியுடன் கூடிய வாள் இன்று(டிச.,26) காணவில்லை. அருங்காட்சியகத்தை ஊழியர்கள் திறந்த போது அது காணாமல் போனது தெரியவந்தது.

விலைமதிப்பற்ற பழமையான வாள் காணாமல் போனது குறித்து தொல்லியல் துறை இளநிலை உதவியாளர் தினேஷ் குமார் பொறையார் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us