UPDATED : டிச 03, 2024 08:53 AM
ADDED : டிச 03, 2024 08:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
புதுக்கோட்டை மீனவர்கள் 18 பேர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அவர்களது 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.