sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

90 அணைகளில் 198 டி.எம்.சி., நீர் இருப்பு

/

90 அணைகளில் 198 டி.எம்.சி., நீர் இருப்பு

90 அணைகளில் 198 டி.எம்.சி., நீர் இருப்பு

90 அணைகளில் 198 டி.எம்.சி., நீர் இருப்பு


ADDED : ஜன 03, 2025 02:55 AM

Google News

ADDED : ஜன 03, 2025 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக அணைகளில், 198 டி.எம்.சி., நீர் கையிருப்பில் உள்ளதால், ஏப்ரல் மாதம் வரை பாசனத்திற்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை.

தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன. இவற்றின் ஒட்டு மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி.,யாகும். இதில், மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட, 18 அணைகள் அதிக கொள்ளளவு உடையவை.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கிய, வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ளது. எனினும், பருவம் தவறிய மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. பருவமழை கை கொடுத்ததால், 90 அணைகளின் நீர் கையிருப்பு, 198 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சேலம் மேட்டூர் அணையில், அதன் முழு கொள்ளளவான 93.4 டி.எம்.சி., அளவிற்கு நீர் நிரம்பி உள்ளது. ஈரோடு பவானிசாகரில் 26.8, கோவை பரம்பிக்குளத்தில் 12.4, திருவண்ணாமலை சாத்தனுார் அணையில், 7.15 டி.எம்.சி., அளவிற்கு நீர் இருப்பு உள்ளது.

அணைகளில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதால், ஏப்ரல் மாதம் வரை பாசனத்திற்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us