sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பந்தலூரில் விஷம் வைத்து கொல்லப்பட்ட இரண்டு புலிகள்

/

பந்தலூரில் விஷம் வைத்து கொல்லப்பட்ட இரண்டு புலிகள்

பந்தலூரில் விஷம் வைத்து கொல்லப்பட்ட இரண்டு புலிகள்

பந்தலூரில் விஷம் வைத்து கொல்லப்பட்ட இரண்டு புலிகள்


UPDATED : ஆக 20, 2024 10:07 PM

ADDED : ஆக 20, 2024 01:38 PM

Google News

UPDATED : ஆக 20, 2024 10:07 PM ADDED : ஆக 20, 2024 01:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர் வனக்கோட்டத்தில் இறந்த இரு புலிகள் தொடர்பான முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை விபரம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட, சசக்ஸ் என்ற தனியார் தேயிலை தோட்டத்தில்,இரண்டு புலிகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டது. புலிகள் இறந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஒரு காட்டுப்பன்றி இறந்து இருப்பதை வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு தலைமையிலான விசாரணை குழு கண்டறிந்தது.

பின்னர் அங்கு சென்று பார்த்த பொழுது அந்த இறந்த காட்டுப்பன்றி உடல் அருகில் இரண்டு புலிகளின் கால் தடங்கள் இருப்பது காணப்பட்டது.

அதை இறந்த இரு புலிகளின் கால் தடயங்களை வைத்து சரி பார்க்கப்பட்டது. கால் தடயங்கள் ஒன்று போல் இருந்ததையும் பார்க்கப்பட்டது.

மேலும் காட்டுப்பன்றியின் உடலை முக்கால்வாசி புலிகள் சாப்பிட்டதாக தெரியவந்தது. புலியின் வயிற்று பகுதியில் சிறிதளவு இருந்தது. அதை முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஸ்குமார் தலைமையிலான மருத்துவர்கள், பார்க்கும் பொழுது அதில் அரிசி, மரவள்ளி கிழங்கு போன்றவை இருந்ததில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டது.

பின்பு இரண்டு புலிகளின் உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்பொழுது புலிகளின் வயிற்றுக்குள் காட்டுப்பன்றியின் மாமிசம் இருந்தது பார்க்கப்பட்டது. மேலும் இரண்டு புலிகளின் உள் உறுப்புகளை ஆய்வு செய்தபோது, விஷத்தினால் இறந்திருக்க கூடும் என மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. இதிலிருந்து பார்க்கும் பொழுது விஷத்தினால் இரு புலிகள் இறந்திருக்க கூடும் என்று தெரிய வருகிறது. காட்டுப்பன்றி ஏதாவது விஷம் கலந்த உணவினை சாப்பிட்டு அந்த காட்டுப்பன்றியை புலிகள் அடித்து சாப்பிட்டதால் காட்டுப்பன்றி மற்றும் புலிகள் இறந்து இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

புலிகள் மற்றும் காட்டுபன்றியின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரம் செய்யப்பட்டது. அதனை ஆய்வகத்திற்கு அனுப்பி அறிக்கை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் வன உயிரின வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பகுதிகளில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த பகுதி முழுவதும் இரண்டு வனச்சரகர்கள் தலைமையில் வனப்பணியாளர்களை குழுக்களாக பிரிக்கப்பட்டு விசாரணையும், தேடுதல் பணியும் நடந்து வருகிறது. உதவி வனப்பாதுகாவலர், வனப்பதுகாப்பு படை, நீலகிரியும் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us