ADDED : ஆக 15, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பள்ளிக்கல்வித் துறை சார்பில், 20 அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தியும், 200 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்தியும், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 2; கடலுார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திண்டுக்கல், திருப்பத்துார், மதுரை, சென்னை, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில், தலா ஒரு பள்ளி என, மொத்தம் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
20 பள்ளிகளுக்கு 200 ஆசிரியர்களை நியமிக்கவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.