உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 19, 2024 04:23 AM
அ நிறம் | அளவு
சென்னை, : லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகம் முழுதும் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை 9:00 மணி நிலவரப்படி, 2.81 கோடி ரூபாய் ரொக்கம்; 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள்; 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள்; 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 3.50 கோடி ரூபாய்.
தமிழகத்தில், 2014 லோக்சபா தேர்தலில், 25.05 கோடி; 2016 லோக்சபா தேர்தலில் 113.8 கோடி;2019 லோக்சபா தேர்தலில், 229.73 கோடி ரூபாய் ரொக்கம் உட்பட 709.66 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
