sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் 18 நாட்களில் மழைக்கு 20 பேர் பலி

/

தமிழகத்தில் 18 நாட்களில் மழைக்கு 20 பேர் பலி

தமிழகத்தில் 18 நாட்களில் மழைக்கு 20 பேர் பலி

தமிழகத்தில் 18 நாட்களில் மழைக்கு 20 பேர் பலி

1


ADDED : அக் 20, 2025 07:30 AM

Google News

ADDED : அக் 20, 2025 07:30 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில், இம்மாதம் 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, மழைக்கு 20 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து, வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. மாநிலம் முழுதும் சில நாட்களாக, பரவலாக மழை பெய்து வருகிறது.

சில மாவட்டங்களில் கனமழையும் பெய்துள்ளது. இம்மாதம் 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, மழைக்கு, 10 பெண்கள், எட்டு ஆண்கள், இரண்டு குழந்தைகள் என, மொத்தம் 20 பேர் இறந்துள்ளனர்.

அதிகபட்சமாக கடலுார் மாவட்டத்தில் ஐந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று பேர் இறந்துள்ளனர். மேலும், 21 பேர் காயம் அடைந்துள்ளனர்.

மாநிலம் முழுதும் மழையில், 435 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன; 267 கால்நடைகள் இறந்துள்ளன.

தேனி மாவட்டத்தில் 7,500, ராணிப்பேட்டை மாவட்டத்தில், 3,800 என, 11,300 கோழிகள் இறந்துள்ளன. 45 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us