sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தங்கம் விலை தொடர்ந்து சரிவு விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு

/

தங்கம் விலை தொடர்ந்து சரிவு விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு

தங்கம் விலை தொடர்ந்து சரிவு விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு

தங்கம் விலை தொடர்ந்து சரிவு விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு


ADDED : நவ 16, 2024 11:46 PM

Google News

ADDED : நவ 16, 2024 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தங்கம் விலை குறைந்து வருவதால், தமிழக நகைக் கடைகளில், தினசரி ஆபரண தங்கம் விற்பனை, வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சிறியது, நடுத்தரம், பெரியது என, 35,000 நகைக் கடைகள் உள்ளன. அவற்றில், தினமும் சராசரியாக, 6,000 கிலோ தங்கம் விற்பனையாகிறது.

நிறுத்துவதில்லை


கல்வி, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு பணமாக மாற்ற கூடிய, மதிப்புமிகு உலோகமாக இருப்பதால், பாதுகாப்பு கருதியும், ஆபரணமாக அணியவும், பலரும் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர்.

இதனால், அதன் விலை அதிகரித்தாலும், பெரும்பாலான மக்கள் வாங்கும் அளவை குறைத்து வாங்குகின்றனரே தவிர, வாங்குவதை நிறுத்துவதில்லை.

ரஷ்யா, உக்ரைன் போர், அமெரிக்க தேர்தல் உள்ளிட்ட சர்வதேச காரணிகளால், பாதுகாப்பு கருதிய உலக முதலீட்டாளர்கள், கடந்த மாதம் வரை தங்கத்தில் அதிக முதலீடு செய்தனர்.

இதனால், உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்தது. நம் நாட்டிலும் அதன் விலை தொடர்ந்து அதிகரித்தது. தமிழகத்தில், கடந்த அக்., 30ல் எப்போதும் இல்லாத வகையில், 22 காரட் ஆபரண தங்கம் சவரன் விலை, 59,000 ரூபாயை எட்டியது.

இந்தாண்டு ஜன., 1ல் சவரன் தங்கம், 47,820 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த 10 மாதங்களில் மட்டும் சவரனுக்கு, 11,000 ரூபாய் அளவுக்கு விலை உயர்ந்தது. தீபாவளிக்காக அரசு, தனியார் நிறுவனங்கள், பணியாளர்களுக்கு போனஸ் வழங்கின.

கூடுதல் பணப்புழக்கத்தாலும், தீபாவளிக்கு தங்கம் வாங்கினால், தங்களிடம் உள்ள செல்வம் பெருகும் என்ற காரணத்தாலும், தங்கம் விலை உச்சத்தை எட்டியபோதும், பலரும் தீபாவளிக்கு தங்கம் வாங்கினர்.

அமெரிக்க தேர்தல் முடிந்த நிலையில், அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்ப், தொழில் துறையை மேம்படுத்தும் வகையில், பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

'கிரிப்டோ கரன்சி'


இதனால், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்து, அமெரிக்க டாலர், பங்குச்சந்தை, 'கிரிப்டோ கரன்சி' போன்றவற்றில் முதலீடு செய்து வருகின்றனர்.

இதனால், உலக சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் இம்மாதம் துவக்கத்தில் இருந்து, தங்கம் விலை குறைந்து வருகிறது.

அதன்படி, கடந்த 1ம் தேதி 59,080 ரூபாய்க்கு விற்ற சவரன் தங்கம், நேற்று, 55,480 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த 15 நாட்களில் மட்டும் சவரனுக்கு, 3,600 ரூபாய் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை, தற்போது குறைந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மக்கள் பலரும் நகைகளை வாங்க, ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால், இம்மாதத்தில் தங்கம் விற்பனை, தினசரி விற்பனையை விட, 20 சதவீதம்,அதாவது 1,200 கிலோ அதிகம் விற்பனையாகி உள்ளது.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us