sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வன உயிரினங்களை பாதுகாக்க 20,000 மாணவர்களுக்கு பயிற்சி

/

வன உயிரினங்களை பாதுகாக்க 20,000 மாணவர்களுக்கு பயிற்சி

வன உயிரினங்களை பாதுகாக்க 20,000 மாணவர்களுக்கு பயிற்சி

வன உயிரினங்களை பாதுகாக்க 20,000 மாணவர்களுக்கு பயிற்சி


ADDED : ஜூன் 09, 2025 06:02 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 06:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : வன உயிரினங்கள் பாதுகாப்பு தொடர்பாக, 20,000 மாணவர்களுக்கு, 3 கோடி ரூபாய் செலவில், குறுகிய கால சான்றிதழ் பயிற்சி அளிக்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

வனத்துறை சார்பில், வன உயிரினங்கள் பாதுகாப்பு, காட்டுத்தீ தடுப்பு, மனித - வன உயிரின மோதல் தடுப்பு என, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதில், ஏற்கனவே உள்ள, வனத்துறை களப் பணியாளர்களின் பங்களிப்பு போதுமானதாக இல்லை. எனவே, பள்ளி, கல்லுாரி மாணவர்களை தயார்படுத்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:


தமிழகத்தில் பசுமை பாதுகாப்புக்காக, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், தேசிய பசுமை படை திட்டம், செயல்பாட்டில் உள்ளது. வன உயிரினங்கள் பாதுகாப்பு மற்றும் கணக்கெடுப்பு, காட்டுத்தீ மேலாண்மை, மனித வன உயிரின மோதல் தடுப்பு போன்ற பணிகளுக்கும், மாணவர்களை தயார்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.

இதற்காக, 20,000 மாணவர்களுக்கு குறுகியகால பயிற்சி அளித்து, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு, 'இளம் இயற்கை காவலர்கள்' என, சான்றிதழ் அளிக்கப்படும். இத்திட்டத்துக்காக தமிழக அரசு, 3 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. பயிற்சி இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us