2.07 லட்சம் கடலாமை முட்டைகள் சேகரிப்பு: வனத்துறை தகவல்
2.07 லட்சம் கடலாமை முட்டைகள் சேகரிப்பு: வனத்துறை தகவல்
ADDED : மார் 16, 2026 02:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'தமிழகத்தில் நடப்பாண்டில், இதுவரை, 2.07 லட்சம் கடலாமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு உள்ளன' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில், திருவள்ளூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான மாவட்டங்களில், கடலாமைகள் கரைக்கு வந்து முட்டையிடுகின்றன.
கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில், கடலாமைகள் இறந்ததால், தற்போது கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடலோர பகுதிகளில், மீனவர்கள், வன உயிரின ஆர்வலர்கள், வனத்துறையினர் இணைந்து, கடலாமை முட்டைகள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் நடப்பு ஆண்டில், 51 இடங்களில், கடலாமை முட்டைகள் சேகரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றில், 2.07 லட்சம் கடலாமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, 1,788 கூடுகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

