ADDED : மார் 17, 2024 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21பேர் இலங்கை கடற்படையால் இன்று(மார்.,17) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரம் தளத்திலிருந்து மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் 21 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச்சென்றது. மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

