sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பறக்கும் படை சோதனையில் 23 கிலோ கொலுசு சிக்கியது

/

பறக்கும் படை சோதனையில் 23 கிலோ கொலுசு சிக்கியது

பறக்கும் படை சோதனையில் 23 கிலோ கொலுசு சிக்கியது

பறக்கும் படை சோதனையில் 23 கிலோ கொலுசு சிக்கியது


ADDED : ஜூன் 12, 2024 05:46 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 05:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே ஆவணங்களின்றி கொண்டு சென்ற, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிக் கொலுசுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று காலை விக்கிரவாண்டி அடுத்த மேலக்கொந்தை சாலையில் மேம்பாலம் அருகே துரைச்செல்வன் தலைமையிலான தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவ்வழியே வந்த 'டாடா நெக்ஸா' காரை நிறுத்தி சோதனை செய்ததில், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ 234 கிராம் வெள்ளி கொலுசுகள் ஆவணங்களின்றி கொண்டு செல்வது தெரிய வந்தது. விசாரணையில் விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் கிராமத்தை சேர்ந்த கவியரசன், சிறு வியாபாரிகளிடம் விற்பனை செய்ய கொண்டு செல்வது தெரிய வந்தது.

ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லாததால் கொலுசுகளை பறிமுதல் செய்து, தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் யுவராஜிடம் ஒப்படைத்தனர். அவர், கொலுசுகளை சீலிட்டு, உதவி கருவூலத்தில் ஒப்படைத்தார்.






      Dinamalar
      Follow us