ADDED : ஜன 23, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மின் வாரியத்திற்குச் சொந்தமான, ஐந்து அனல் மின் நிலையங்களுக்கு, உற்பத்திக்கான எரிபொருளாக, 72,000 டன் நிலக்கரி தேவை. ஒடிசா மாநிலத்தில் உள்ள சுரங்கங்களில் இருந்து நிலக்கரி எடுக்கப்பட்டு, தினமும் கப்பலில்,தமிழகத்திற்கு அனுப்பப்படுகிறது.
சுரங்கத்தில் இருந்து துறைமுகத்திற்கு அனுப்ப, போதிய சரக்கு ரயில் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால், மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு தினமும், 50,000 டன் நிலக்கரி அனுப்பப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன், நிலக்கரி தட்டுப்பாட்டால், இருப்பு வைக்கமுடியாத நிலையில், தற்போது, 26 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது.
இது, ஒரு மாதத்திற்கு மேல் பயன்படும்.